கேலோ இந்தியா போட்டிக்கான தமிழக வீரர்கள் தேர்வு துவக்கம்
கேலோ இந்தியா போட்டிக்கான தமிழக வீரர்கள் தேர்வு துவக்கம்
UPDATED : ஏப் 23, 2024 12:00 AM
ADDED : ஏப் 23, 2024 10:35 AM

சென்னை:
இந்தாண்டுக்கான கேலோ இந்தியா போட்டிகளில் பங்கேற்கும் வகையில், தமிழகத்திலிருந்து திறமையான வீரர் - வீராங்கனையரை தேர்வு செய்யும் போட்டிகள், நேற்று துவங்கின.
மத்திய அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர்நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும், இந்திய விளையாட்டு ஆணையத்தின் சார்பில், சென்னை, பெரியமேடு நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த போட்டியில், தடகள வீரர், வீராங்கனையர் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
காலையில் பொதுத்திறனறி தேர்வுகளும், மாலையில் குறிப்பிட்ட விளையாட்டுகளில் உள்ள திறமையை சோதிக்கும் வகையிலான சிறப்பு போட்டிகளும் நடத்தப்பட்டன.
இன்று, குத்துச்சண்டை, நாளை வாலிபால், 25ல் கால்பந்து, 26ல் கபடி, 27ல் கோ-கோ ஆகிய விளையாட்டு வீரர் - வீராங்கனையருக்கான போட்டிகள் நடத்தப்படும். இந்த தேர்வு காலை 7:00 மணிக்கு துவங்குகிறது.