sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

உள்துறை அமைச்சராக விரும்பிய சேஷன்: காந்தி பேரனின் புத்தகத்தில் புது தகவல்

/

உள்துறை அமைச்சராக விரும்பிய சேஷன்: காந்தி பேரனின் புத்தகத்தில் புது தகவல்

உள்துறை அமைச்சராக விரும்பிய சேஷன்: காந்தி பேரனின் புத்தகத்தில் புது தகவல்

உள்துறை அமைச்சராக விரும்பிய சேஷன்: காந்தி பேரனின் புத்தகத்தில் புது தகவல்


UPDATED : ஏப் 18, 2025 12:00 AM

ADDED : ஏப் 18, 2025 01:18 PM

Google News

UPDATED : ஏப் 18, 2025 12:00 AM ADDED : ஏப் 18, 2025 01:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை செய்யப்பட்டதும் மத்திய உள்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்க, மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் விரும்பியதாக, காந்தியின் பேரனும் மேற்கு வங்க முன்னாள் கவர்னருமான கோபால கிருஷ்ண காந்தி எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த, 1991ல் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, தலைமை தேர்தல் கமிஷனராக இருந்தவர் டி.என்.சேஷன். அப்போது, தமிழகத்துக்கு பிரசாரத்துக்கு வந்த ராஜிவ், ஸ்ரீபெரும்புதுாரில் விடுதலைப்புலிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், 1991, மே 21ல் கொல்லப்பட்டார்.

இதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளை காந்தியின் பேரனும் மேற்கு வங்க முன்னாள் கவர்னருமான கோபால கிருஷ்ண காந்தி, தி அண்டையிங் லைட்: எ பெர்சனல் ஹிஸ்டரி ஆப் இண்டிபெண்டென்ட் இண்டியா என்ற தன் புத்தகத்தில் எழுதியுள்ளார்.

அதன் விபரம்:

ராஜிவ் கொலையான தகவலை, அன்றைய ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமனுக்கு முதலில் தெரிவித்தவர், டி.என்.சேஷன். அன்று நள்ளிரவிலேயே ஜனாதிபதி மாளிகைக்கு வேகமாக வந்தார்.

அங்கு, ஜனாதிபதியுடன் நானும், ஜனாதிபதியின் செயலர் பி.முராரியும் இருந்தோம். 12 அடி தொலைவில் இருந்தபடியே, அவசரமாகவும், கிசுகிசுப்பாகவும், கண்களை விரித்தபடியும் சேஷன் பேசத் துவங்கினார்.

லோக்சபா தேர்தலை உடனே நிறுத்த வேண்டும்; நாட்டின் பாதுகாப்பை மிகக் கடுமையான கட்டுப்பாட்டின் கீழ், மிக விரைவாக கொண்டு வர வேண்டும் என, நினைக்கிறேன். இந்த சூழ்நிலையில், தலைமை தேர்தல் கமிஷனர் பதவிக்கும் மேலாக வேறு ஏதேனும் பங்காற்ற தயாராக இருக்கிறேன்.

உள்துறை அமைச்சருக்கு பொருத்தமாக இருப்பேன் என ஜனாதிபதி கருதினால், அமைச்சராகவும் என்னால் பணியாற்ற முடியும் என சேஷன் கூறினார்.

ஆனால், அவரது ஆலோசனைகள் பரிசீலிக்கப்படவில்லை. சிறிது நேரத்திலேயே, அங்கு வந்த பிரதமர் சந்திரசேகர், மத்திய அமைச்சரவை செயலர் நரேஷ் சந்திரா ஆகியோர், 'பதற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

எந்த பீதியும் தேவையில்லை, தேர்தலை நிறுத்த வேண்டிய அவசியமும் இல்லை என ஜனாதிபதியிடம் உறுதி அளித்தனர்.

இதையடுத்து, நிலைமையை முழுமையாக கையாளும் அரசின் தலைவரான பிரதமரே நம்பிக்கையுடன் இருக்கிறார். எந்தவொரு உள் மற்றும் வெளிவிவகாரங்களை அவர் எதிர்கொள்வார். இந்தியா பாதுகாப்பாக இருக்கிறது என தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷனிடம் ஜனாதிபதி வெங்கட்ராமன் கூறினார்.

இதனால், லோக்சபா தேர்தல் ரத்து செய்யப்படவில்லை. இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஓட்டுப்பதிவுகள் மட்டும் 1991ம் ஆண்டு ஜுன் 12, 15 தேதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. முதற்கட்ட தேர்தல், ராஜிவ் கொலைக்கு முன்தினமான மே 20ல் நடந்தது.

இவ்வாறு அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us