பயிற்சி வகுப்பில் படித்து பணி நியமனம் பெற்ற 13 பேருக்கு கேடயம் வழங்கல்
பயிற்சி வகுப்பில் படித்து பணி நியமனம் பெற்ற 13 பேருக்கு கேடயம் வழங்கல்
UPDATED : ஜன 20, 2026 04:55 PM
ADDED : ஜன 20, 2026 05:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 285 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பெற்றுக் கொண்ட கலெக்டர், உரிய அலுவலர்களிடம் வழங்கி, 'மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.
தொடர்ந்து, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும், தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் நடந்த பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பில் பயின்று, பல்வேறு துறைகளில் பணி நியமனம் பெற்ற, 13 மாணவர்களுக்கு, கேடயம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

