sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பள்ளி சீருடையில் மாணவர்கள் புகைபிடிக்கும் அதிர்ச்சி வீடியோ

/

பள்ளி சீருடையில் மாணவர்கள் புகைபிடிக்கும் அதிர்ச்சி வீடியோ

பள்ளி சீருடையில் மாணவர்கள் புகைபிடிக்கும் அதிர்ச்சி வீடியோ

பள்ளி சீருடையில் மாணவர்கள் புகைபிடிக்கும் அதிர்ச்சி வீடியோ


UPDATED : ஆக 02, 2025 12:00 AM

ADDED : ஆக 02, 2025 08:22 AM

Google News

UPDATED : ஆக 02, 2025 12:00 AM ADDED : ஆக 02, 2025 08:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்:
பள்ளி சீருடையில் மாணவர்கள் புகை பிடிக்கும் வீடியோ பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம், அரூர் பஸ் ஸ்டாண்டில், டீக்கடை ஒன்றில் அமர்ந்து, அரசு பள்ளி மாணவர்கள் மூவர் சீருடையுடன் ஹாயாக புகை பிடிக்கின்றனர். இந்த காட்சி, வாட்ஸாப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

சில ஆண்டுகளாக, அரூர், தீர்த்தமலை, நரிப்பள்ளி, கோட்டப்பட்டி, மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் சிகரெட் மற்றும் கஞ்சா புகைத்தல் போன்ற போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். மேலும், சொலியூசன் பசையை நுகர்ந்து போதை ஏற்றிக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

சமீபமாக, பள்ளி வளாகம், பஸ் ஸ்டாண்ட், டீக்கடை என, மக்கள் அதிகம் கூடும் இடங்களில், எவ்வித அச்சமின்றி சிகரெட் புகைத்து வருகின்றனர். இந்நிலையில், அரூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள டீக்கடை ஒன்றில், அரசு பள்ளி மாணவர்கள் சீருடையுடன் சிகரெட் புகைக்கும் காட்சி, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், மாணவர்களுக்கு போதை பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us