sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இப்படித்தான் இருக்கணும் ஆசிரியப்பணி; கல்லுாரி கல்வி இயக்குனர் அறிவுரை

/

இப்படித்தான் இருக்கணும் ஆசிரியப்பணி; கல்லுாரி கல்வி இயக்குனர் அறிவுரை

இப்படித்தான் இருக்கணும் ஆசிரியப்பணி; கல்லுாரி கல்வி இயக்குனர் அறிவுரை

இப்படித்தான் இருக்கணும் ஆசிரியப்பணி; கல்லுாரி கல்வி இயக்குனர் அறிவுரை


UPDATED : ஆக 02, 2025 12:00 AM

ADDED : ஆக 02, 2025 08:24 AM

Google News

UPDATED : ஆக 02, 2025 12:00 AM ADDED : ஆக 02, 2025 08:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
நாளை சமுதாயம், தற்போதைய ஆசிரியர்களை நினைவில் கொள்ளும் படி, ஆசிரியப்பணி இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் மற்றும் கல்லுாரி கல்வி இயக்ககம் இணைந்து, விளைவு அடிப்படையிலான கல்வி பயிற்சி பட்டறை, கோவை மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனரகத்தின் ஏற்பாட்டில், அரசு கலைக் கல்லுாரியில் நேற்று நடந்தது.

கோவை மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் செண்பக லட்சுமி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, கல்லுாரி கல்வி இயக்குனர் சுந்தரவல்லி, ஆசிரியப் பணியின் முக்கிய நோக்கமான கற்பித்தலில், புதுப்பித்துக் கொள்வதன் அவசியம் குறித்தும், இதுபோன்ற நிகழ்ச்சிகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன என்றும் கூறினார்.

மேலும், தமக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களை நினைவில் கொண்டிருப்பதை போல், நாளை சமுதாயம், தற்போதைய ஆசிரியர்களை நினைவில் கொள்ளும் படி, ஆசிரியப்பணி இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் துணை தலைவர் விஜயகுமார், புதுமைகளை கற்றுக்கொள்ள ஆர்வமாய் இருக்கும் பேராசிரியர்களுக்கு, தகுந்த வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் கூறினார்.

பயிற்சியளிக்க வந்த வல்லுனர் கண்மணி புத்தி, பாடத்திட்டம் அமைக்கும் முறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள், அதற்கான வழிமுறைகளை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தார். கோவை மண்டல கல்லுாரிகளில் பணிபுரியும் பல்வேறு துறை பேராசிரியர்கள் 75 பேர் பங்கேற்றனர்.

அரசு கலைக் கல்லுாரி முதல்வர் எழிலி நன்றி கூறினார். நிகழ்ச்சியை, கல்லுாரியின் தாவரவியல் துறை இணை பேராசிரியர் புகழேந்தி ஒருங்கிணைத்தார்.






      Dinamalar
      Follow us