UPDATED : ஏப் 08, 2025 12:00 AM
ADDED : ஏப் 08, 2025 07:48 AM
 விருதுநகர்: 
டி.என்.பி.எஸ்.சி.,ன் குரூப் 1, டி.என்.யு.எஸ்.ஆர்.பி.,ன் எஸ்.ஐ., தேர்வுகள் தொடர்பாக விருதுநகரில் ஒரு நாள் கருத்தரங்கம் ஏப். 10ல் நடக்கிறது என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்தார்.
அவரது செய்திக்குறிப்பு: 
டி.என்.பி.எஸ்.சி.,ன் குரூப் 1, டி.என்.யு.எஸ்.ஆர்.பி.,ன் எஸ்.ஐ., தேர்வுகள் விரைவில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விருப்பமுள்ள விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் வகையில் ஏப். 10ல் மாவட்ட நிர்வாகத்தால் ஒருநாள் கருத்தரங்கு மருத்துவக்கல்லுாரி கலையரங்கில் நடத்தப்படும். எஸ்.ஐ., தேர்வர்களுக்கு காலை 9:30 மணி - மதியம் 1:30 மணி வரை, குரூப்-1 தேர்வர்களுக்கு மதியம் 1:30 மணியிலிருந்து மாலை 5:30 மணி வரை நடைபெறும்.
இந்நிகழ்ச்சியில் இத்தேர்வுகள் குறித்து விளக்கங்கள், தெளிவுரை வழங்கப்படும். பங்கேற்க விரும்புவோர் https://forms.gle/yqdmFbP1tGqBfA7Z6 என்ற கூகுள் பார்ம் மூலமாக விண்ணப்பிக்கலாம், என்றார்.

