UPDATED : நவ 04, 2024 12:00 AM
ADDED : நவ 04, 2024 10:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:
முறையான அனுமதி பெறாமல் யுஜிசி லோகோவை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று யுஜிசி எச்சரித்துள்ளது.
இது குறித்து அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முறையான அனுமதி, அங்கீகாரம் பெறாமல் யுஜிசியின் லோகோவை பல்வேறு நிறுவனங்கள் பயன்படுத்துவது கவனத்துக்கு வந்துள்ளது. அனுமதியின்றி பெயர், லோகோ மற்றும் வலைதளத்தை தவறாக பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.