UPDATED : பிப் 26, 2026 03:07 PM
ADDED : பிப் 26, 2026 03:11 PM

திருப்பூர்:
மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள 'பிளேம்' பல்கலைக்கழக மாணவ, மாணவியர், 20 பேர், பின்னலாடை தொழில் குறித்த ஆராய்ச்சி படிப்புக்காக, திருப்பூர் வந்தனர். இரண்டு நாட்களாக, பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், சாய ஆலைகள், 'நிட்டிங்' இயந்திரங்கள், பிரின்டிங் மற்றும் எம்ப்ராய்டரிங் உட்பட 'ஜாப் ஒர்க்' நிறுவனங்களை பார்வையிட்டனர்.
தொடர்ந்து, தொழில் அமைப்பு நிர்வாகிகளை நேரில் சந்தித்தும் கலந்துரையாடினர்.
நேற்று பிரின்டிங், சாய ஆலைகள் உள்ளிட்ட தொழில் அமைப்பினருடனான சந்திப்புக்கு பிறகு, தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கத்தில் (சைமா) நிர்வாகிகளுடன் கலந்துரையாடினர்.
'சைமா' தலைவர் சண்முகசுந்தரம், பொதுசெயலாளர் தாமோதரன் உள்ளிட்ட நிர்வாகிகள், திருப்பூரின் பின்னலாடை வரலாறு துவங்கி, தற்போதைய 'டிரெண்டிங்' மற்றும் 'ஏ.ஐ.,' தொழில்நுட்ப இயந்திர வருகை, திருப்பூரில் நடக்கும் கண்காட்சிகள், உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, ஏற்றுமதி சந்தை மதிப்புகளையும் எடுத்துரைத்தனர்.

