sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சத்தீஸ்கரில் என்கவுன்டர்: 3 நக்சல்கள் பலி

/

சத்தீஸ்கரில் என்கவுன்டர்: 3 நக்சல்கள் பலி

சத்தீஸ்கரில் என்கவுன்டர்: 3 நக்சல்கள் பலி

சத்தீஸ்கரில் என்கவுன்டர்: 3 நக்சல்கள் பலி


ADDED : செப் 28, 2025 11:50 PM

Google News

ADDED : செப் 28, 2025 11:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேர்: சத்தீஸ்கர் மாநிலம் காங்கேர் மாவட்டம் மற்றும் கரியாபந்த் மாவட்ட எல்லையில் உள்ள ரவாஸ் வனப்பகுதியில், நக்சல்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நேற்று காங்கேர் மற்றும் கரியாபந்த் மாவட்ட ரிசர்வ் போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்புப் படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள், போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஒரு பெண் உட்பட மூன்று நக்சல்கள் கொல்லப்பட்டனர். மூவரின் உடல்களும் மீட்கப்பட்டன.

இவர்களின் தலைக்கு ஒட்டுமொத்தமாக, 14 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.

சம்பவ இடத்தில் இருந்து தானியங்கி துப்பாக்கி உள்ளிட்ட மூன்று ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சத்தீஸ்கரில் இந்தாண்டில் எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகளில் இதுவரை, 252 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர்.








      Dinamalar
      Follow us