தி.மு.க.,விடம் ராஜ்யசபா 'சீட்' கேட்கும் ம.தி.மு.க.,
தி.மு.க.,விடம் ராஜ்யசபா 'சீட்' கேட்கும் ம.தி.மு.க.,
UPDATED : பிப் 24, 2026 11:15 PM
ADDED : பிப் 24, 2026 06:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., பொருளாளர் பாலு தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவினருடன், ம.தி.மு.க., அவைத் தலைவர் அர்ஜுனராஜ் தலைமையிலான ம.தி.மு.க., குழுவினர் நேற்று பேச்சு நடத்தினர்.
பின், அர்ஜுனராஜ் கூறியதாவது: கடந்த தேர்தலை விட, கூடுதலான தொகுதிகளை கேட்டுள்ளோம். மேலும், ஒரு ராஜ்யசபா 'சீட்'டும் தருமாறு தி.மு.க.,விடம் கேட்டுள்ளோம்.
தொகுதிகளை குறைத்துக் கொள்ளுங்கள் என, தி.மு.க., சொல்லவில்லை. தனிச்சின்னத்தில் போட்டியிட, ம.தி.மு.க., முடிவு செய்துள்ளது. இவ்வாறு கூறினார்.

