sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

டில்லி உஷ்ஷ்ஷ்: கோபத்தில் பிரதமர் மோடி!

/

டில்லி உஷ்ஷ்ஷ்: கோபத்தில் பிரதமர் மோடி!

டில்லி உஷ்ஷ்ஷ்: கோபத்தில் பிரதமர் மோடி!

டில்லி உஷ்ஷ்ஷ்: கோபத்தில் பிரதமர் மோடி!

14


ADDED : மார் 09, 2025 01:34 AM

Google News

ADDED : மார் 09, 2025 01:34 AM

14


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: வடமாநிலங்களில், பான்மசாலா போடும் பழக்கம் அதிகம். தற்போது, இது தமிழர்களுக்கும் தொத்தி விட்டது. பான்பராக் போட்டு, கண்ட இடத்தில் எச்சில் துப்புவதில், முதலிடம் வடமாநிலத்தவர்க்கு தான்!

சமீபத்தில் உ.பி., சட்டசபை வளாகத்தில், எம்.எல்.ஏ., ஒருவர் பான்மசாலா எச்சிலை சுவரில் துப்பி விட்டார்; சுத்தமாக வெள்ளை அடிக்கப்பட்ட சுவரில், இந்த பான்மசாலா கறை நன்றாக தெரிந்தது.

'எங்கும், எதிலும் சுத்தமாக இருக்க வேண்டும் என பிரதமரும், உ.பி., முதல்வரும் சொல்லிக் கொண்டிருக்கும்போது, இப்படி செய்யலாமா?' என, கோபப்பட்ட உ.பி., சட்டசபை சபாநாயகர், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.,வை கண்டித்தார்; ஆனால், அவருடைய பெயரை வெளியிடவில்லை.

இந்த விஷயம் தெரிந்த உடனேயே, பிரதமர் அலுவலகத்திலிருந்து, சபாநாயகருக்கு போன் வந்ததாம். 'இப்படி அசுத்தம் செய்தவரை சும்மா விடக்கூடாது. 'துாய்மையான இந்தியா' என, திட்டத்தை நிறைவேற்றி வரும் நிலையில், மக்கள் பிரதிநிதிகளே இப்படி செய்யலாமா? நிச்சயம், இதற்கு தண்டனை தர வேண்டும். யாராக இருந்தாலும் அந்த எம்.எல்.ஏ.,விற்கு ஒரு மாத சம்பளத்தை, 'கட்' செய்ய வேண்டும்' என கூறினாராம் பிரதமர்.






      Dinamalar
      Follow us