sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

வறுத்தெடுக்கும் 'ஆப்'கள்! சூடாக சாப்பிட்டால் குறைந்த விலை; பார்சலில் அய்யோ தாங்க முடியலை!

/

வறுத்தெடுக்கும் 'ஆப்'கள்! சூடாக சாப்பிட்டால் குறைந்த விலை; பார்சலில் அய்யோ தாங்க முடியலை!

வறுத்தெடுக்கும் 'ஆப்'கள்! சூடாக சாப்பிட்டால் குறைந்த விலை; பார்சலில் அய்யோ தாங்க முடியலை!

வறுத்தெடுக்கும் 'ஆப்'கள்! சூடாக சாப்பிட்டால் குறைந்த விலை; பார்சலில் அய்யோ தாங்க முடியலை!

6


ADDED : ஆக 06, 2024 06:22 AM

Google News

ADDED : ஆக 06, 2024 06:22 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்தால், உணவு டெலிவரி நிறுவனங்கள் வழக்கத்தை விட பல மடங்கு விலையை உயர்த்தி விடுவதாக, அவ்வப்போது குற்றச்சாட்டு எழுவது வழக்கம். தற்போது இந்த விவகாரம், சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

நமது வசதிக்காகவே ஆன் லைனில் ஆர்டர் செய்கிறோம். அதற்காக சற்று கூடுதல் விலை கொடுப்பதில் தவறில்லை என ஒருதரப்பினர் கூறுகின்றனர். அதற்காக, நேரில் செல்வதற்கும் ஆன்லைன் ஆர்டருக்குமான விலை வித்தியாசம் மிக அதிகமாக இருப்பது, பகல் நேர வழிப்பறி.

இந்த கட்டணங்களை அரசு வரைமுறைப்படுத்த வேண்டும் என, மற்றொரு தரப்பினர் எதிர் கருத்தை முன்வைத்துள்ளனர். இதுதொடர்பாக, ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்பவர்கள், ஓட்டல் நிர்வாகம், வினியோகிப்பவர் என மூன்று தரப்பினரிடமும் பேசினோம்.

நவநீதன், கல்லுாரி மாணவர், ஒண்டிப்புதுார்:


நண்பர்களுடன் சேர்ந்தோ, தனியாகவோ வழக்கமான உணவுக்குப் பதில் வேறு உண்ணலாம் என நினைத்து ஆர்டர் செய்கிறோம். வீட்டில் யாரும் இல்லாத போது, நேரில் செல்வதற்குப் பதில் ஆர்டர் செய்கிறோம். ஆனால், டெலிவரி சார்ஜ், அதற்கு வரி, பார்சலுக்கு தனி கட்டணம், அதற்கு வரி என ரொம்பவும் அதிகமாகவே, கட்டணம் வசூலிக்கின்றனர்.

விலையை விட கிட்டத்தட்ட 2 மடங்கு அதிகமாகிவிடுகிறது. ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்களிடம் இருந்து, சேவை என்ற பெயரில் சுரண்டுவதாகவே கருதுகிறேன்.

உணவின் அளவும் சற்று குறைவாக இருப்பதாகவே உணர்கிறேன். கட்ட ணத்தை வரைமுறைப்படுத்த வேண்டும்.

செல்வகுமார், உணவு டெலிவரி செய்பவர்:


இது ஒரு நல்ல தொழிலாக இருக்கிறது. இன்னொருவரிடம் கைகட்டி நின்று பணிபுரியத் தேவையில்லை. தினமும் ரூ.700 முதல் ரூ.1,600 வரை சம்பாதிக்கலாம். டெலிவரி செய்யும் தூரத்தைப் பொறுத்து, ஒரு பார்சலுக்கு இவ்வளவு எனக் கிடைக்கும்.

வடவள்ளியில் இருந்து, ஐ.ஓ.பி., காலனிக்குச் சென்றால், வார நாட்களில் ரூ.35; வெள்ளி, சனி, ஞாயிறுகளில் ரூ.50 கிடைக்கும். இன்று (நேற்று) மதியம் 1:00 மணியில் இருந்து 3:00 மணிக்குள் 5 ஆர்டர்களை முடித்தால், ரூ.400 கிடைக்கும் என ஆபர் உள்ளது. எங்களுக்கு மட்டுமல்ல வாடிக்கையாளர்களுக்கும் நிறைய ஆபர்கள் கிடைக்கின்றன. இருதரப்புக்குமே பயன்தான்.

வயதானவர்கள், நடக்க முடியாதவர்கள், இரவுப் பணி முடிந்து தனியே வசிப்பவர்கள், மூத்த குடிமக்களுக்கான குடியிருப்பில் இருப்பவர்கள் என, பலருக்கும் இது வசதியாக இருக்கிறது. இளைஞர்கள், குடும்பத்தினர் என மகிழ்ச்சியான தருணங்களுக்காகவும் ஆர்டர் செய்கின்றனர். இதுவரை விலை அதிகம் என எந்த வாடிக்கையாளரும் சொன்னதில்லை.

கதிர்வேல், இன்ஜினியர், விநாயகபுரம்:


தேவைக்காகவே ஆன்லைனில் ஆர்டர் செய்கிறோம் என்பதை மறுக்கவில்லை. பெற்றோர் இல்லாதபோது, ஆர்டர் செய்து சாப்பிடத் தோன்றும். ஒரு பிரபல ஓட்டலில் நேரில் சென்று சாப்பிட்டால், இரண்டு இட்லி 49 ரூபாய். அதுவே ஆன்லைனில் ஆர்டர் செய்தால், 110 ரூபாய். இரண்டு மடங்குக்கும் மேல் விலை அதிகம். நியாயமான கட்டணத்தைச் சேர்த்தால் பரவாயில்லை. இது ரொம்பவே அதிகம். அரசு தலையிட்டு முறைப்படுத்தலாம்.

பிரபல பிரியாணி கடை; நேரில்- பார்சல் ஒப்பீடு!

காந்திபுரத்தில், பிரியாணிக்கு பிரபலமான ஒரு கடையில், நேரில் ஒரு சிக்கன் பிரியாணி சாப்பிட்டால் அதன் விலை ரூ.220. 'ஸொமாட்டோ' 'ஆப்' வாயிலாக ஆர்டர் செய்தால், ரூ.100 ஆபர் அறிவித்துள்ளனர். ஜி.எஸ்.டி., 12.45 ரூபாய், பேக்கேஜிங் ரூ.14.94, அதற்கான ஜி.எஸ்.டி., ரூ.0.75, பிளாட்பார்ம் (செயலி நிறுவனத்துக்கான) கட்டணம் ரூ.6, அதன் மீதான ஜி.எஸ்.டி., ரூ.29.22 என மொத்தம் 234 ரூபாய் ஆகிறது. இதில் டெலிவரிக்கான கட்டணம் இலவசம்.இதுவே, 'ஸ்விக்கி' வாயிலாக ஆர்டர் செய்தால், சிக்கன் பிரியாணியின் விலை ரூ.299. டெலிவரி பார்ட்னருக்கான கட்டணம் ரூ. 27. சிறப்புத் தள்ளுபடி ரூ.125. பிளாட்பார்ம் கட்டணம் ரூ. 6. ரெஸ்டாரன்ட் மற்றும் ஜி.எஸ்.டி., கட்டணங்கள் ரூ.28.73. மொத்தம் ரூ.235.(ஆபர் மற்றும் விலை நிலவரங்கள் ஆக.,5ம் தேதி நிலவரப்படி)



வருவதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி'

கோவை மாவட்ட ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் ராமசாமி கூறியதாவது:உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களால், ஓட்டல் துறைக்கு பாதிப்பு இல்லை. வாடிக்கையாளர் நேரில் வருவதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி. உணவை சூடாகவும், சுவை குறையாமலும் பரிமாற முடியும். பார்சல் செய்து கொண்டு செல்லப்படும் உணவில் சுவை சற்று மாறுபடும். ஆனால், இது காலத்தின் தேவை.குடும்பத்தோடு அவுட்டிங் வருவதுபோல, ஓட்டலுக்கு மக்கள் வந்தனர். இப்போது வீட்டிலேயே வாங்கி சாப்பிட விரும்புகின்றனர். மக்களின் விருப்பத்துக்கேற்ப நாம் மாறாவிட்டால், துறையில் நீடித்திருக்க முடியாது. உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்காக, பார்சலில் உணவின் அளவைக் குறைப்பதில்லை. அதேசமயம், அவர்களுக்கு ஓட்டலைப் பொருத்து, 10 முதல் 20 சதவீதம் வரை கமிஷன் கொடுக்க வேண்டியிருப்பதால், அந்த விலையை வாடிக்கையாளரின் பில்லில் சேர்க்க, விலையை அதிகரிக்கிறோம். உணவு டெலிவரி துறை, இவ்வளவு வளரும் என எதிர்பார்க்கவில்லை. ஒரு கட்டத்தில் தேங்கி விடும் என்றுதான் நினைத்தோம். ஆனால், தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இன்னும் வளரும். மக்களுக்கு இந்த வசதி பிடித்திருப்பதால்தான், தொடர்ந்து பயன்படுத்துகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us