sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

முந்தும் 'பிரதமர்' திணறும் 'முதல்வர்' மருந்தகங்கள் மருந்து சப்ளையின்றி முடங்குகிறதா?

/

முந்தும் 'பிரதமர்' திணறும் 'முதல்வர்' மருந்தகங்கள் மருந்து சப்ளையின்றி முடங்குகிறதா?

முந்தும் 'பிரதமர்' திணறும் 'முதல்வர்' மருந்தகங்கள் மருந்து சப்ளையின்றி முடங்குகிறதா?

முந்தும் 'பிரதமர்' திணறும் 'முதல்வர்' மருந்தகங்கள் மருந்து சப்ளையின்றி முடங்குகிறதா?

19


ADDED : மார் 17, 2025 07:27 AM

Google News

ADDED : மார் 17, 2025 07:27 AM

19


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மத்திய அரசின் 'பிரதமர்' பெயரிலான மருந்தகங்களை முன்மாதிரியாக கொண்டு தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த 'முதல்வர் மருந்தகங்கள்' போதிய மருந்துகள் சப்ளையின்றி முடங்குவதாக புகார் எழுந்துள்ளது.

நாடு முழுவதும் மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதம மந்திரி மக்கள் மருந்தகம் (பி.எம்.பி.ஜே.பி.,) 2008ல் துவங்கப்பட்டது. 2014 வரை நாடு முழுவதும் மொத்தம் 80 மருந்தகம் மட்டும் துவங்கப்பட்ட நிலையில், 2015ல் பிரதமர் மோடி இத்திட்டத்திற்கு 'பிரதான் மந்திரி ஜன் ஒளஷதி யோஜனா' என பெயரிட்டு புத்துயிர் கொடுத்தார்.

தமிழகத்தில் கோவையில் முதல் முதலில் இம்மருந்தகம் துவங்கி தற்போது 1195 மருந்தகங்கள் செயல்படுகின்றன. 35 சதவீதம் கடைகள் பெண்களால் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. 2500க்கும் மேற்பட்ட மருந்துகள் கிடைக்கின்றன. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு இந்த மருந்தகங்களில் ரூ.25 கோடி வரை மருந்து விற்பனை நடக்கிறது. ஒரு மருந்தகத்தில் நாள் ஒன்றுக்கு குறைந்தது 50 பேர் பயனடைந்து வருகின்றனர்.

முதல்வர் மருந்தகம்


மத்திய அரசு பாணியில், தமிழக அரசு சார்பிலும் பிப்.24ல் மலிவு விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படும் என 1000 இடங்களில் முதல்வர் மருந்தகத்தை ஸ்டாலின் திறந்தார். இவை கூட்டுறவுத் துறை சார்பில் திறக்கப்பட்டன. அதேநேரம் இங்கு முழு அளவில் மருந்துகள் சப்ளை இல்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

பத்து மருந்துகளில் இரண்டு மட்டுமே கிடைக்கின்றன. பிற வகை மருந்துகளுக்கு தனியார் மருந்தகங்களை நாட வேண்டியுள்ளதாக மக்கள் புலம்புகின்றனர். பல இடங்களில் ஒரு கிலோ மீட்டருக்குள் அடுத்தடுத்த முதல்வர் மருந்தகம் செயல்படுவதால் விற்பனை ரீதியாகவும் பாதிப்பு ஏற்படுவதாக மருந்தக உரிமையாளர்கள் புலம்புகின்றனர்.

அவர்கள் கூறியதாவது: பிரதமர் மருந்தகங்கள் மருந்தியல் அமைச்சகத்தால் துவங்கப்பட்டுள்ளது. மருந்து கொள்முதல், வினியோகம், சந்தைப்படுத்துதல் போன்றவற்றை ஒருங்கிணைந்த இந்திய மருந்து பொதுத் துறை நிறுவனங்களின் பணியகம் (பி.பி.பி.ஐ.,) மேற்கொள்கிறது. இதுபோன்ற கட்டமைப்பு தமிழகத்தில் இல்லை. அவசர கோலத்தில் முதல்வர் மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது.

கொள்முதல் செய்யுமிடத்தில் மருந்துகளை கையாளும் பார்மசிஸ்ட்டுகளும் இல்லை. பிரதமர் மருந்தகங்களில் தேவை கருதி 20 சதவீதம் வரை வெளியே கொள்முதல் செய்து விற்பனை செய்ய வசதி உள்ளது. முதல்வர் மருந்தகத்தில் அதுபோல் வாங்கி விற்க தடை உள்ளது. மாவட்ட கிடங்குகளில் 3 மாதங்களுக்கு தேவையான மருந்துகள் இருப்பு வைக்கப்படும் என அறிவித்தும் தேவையான மருந்துகள் இல்லை.

முதல்வர் மருந்தகம் நடத்துவோர் சார்பில் மதுரையில் 2 நாட்களுக்கு முன் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், பிப்.24 முதல் மார்ச் 15 வரை நடந்த அதிகபட்ச விற்பனையே (டாப் சேல் கடை) ரூ.30 ஆயிரம்தான் என தெரிய வந்துள்ளது. 25 சதவீதம் தள்ளுபடி உள்ளதால் மக்கள் பயன்பெறும் இம்மருந்தகங்களில் தேவையான மருந்து கிடைக்கும் வகையில் தமிழக அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us