sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

கள்ளச்சாராயத்தை விட குறைந்த விலையில் கஞ்சா: தள்ளாட்டத்தின் உச்சியில் கடலுார் மாவட்டம்

/

கள்ளச்சாராயத்தை விட குறைந்த விலையில் கஞ்சா: தள்ளாட்டத்தின் உச்சியில் கடலுார் மாவட்டம்

கள்ளச்சாராயத்தை விட குறைந்த விலையில் கஞ்சா: தள்ளாட்டத்தின் உச்சியில் கடலுார் மாவட்டம்

கள்ளச்சாராயத்தை விட குறைந்த விலையில் கஞ்சா: தள்ளாட்டத்தின் உச்சியில் கடலுார் மாவட்டம்

3


ADDED : பிப் 28, 2025 05:10 AM

Google News

ADDED : பிப் 28, 2025 05:10 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் கள்ளச்சாராய வழக்குகள் வெகுவாகக் குறைந்த நிலையில், கஞ்சா உள்ளிட்ட போதை வழக்குகள் அதிகரித்து வருகின்றன.

கடலுார் மாவட்டம், புதுச்சேரி அருகில் உள்ளது. இங்கு, டாஸ்மாக்கில் கிடைக்காத சரக்குகள் புதுச்சேரியில் கிடைக்கிறது. இதனால், புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில் கடத்தல் அதிகரித்தது. இதற்கு முன் கடலுார் எஸ்.பி.,யாக இருந்த ராஜாராம், புதுச்சேரி, கடலுார் மாவட்டம் இணைந்து நடத்திய கூட்டத்தில், புதுச்சேரி போலீஸ் அதிகாரிகள் தரப்பில், இங்கு தயாரிக்கப்படும் சரக்குகளில், 35 சதவீதம் புதுச்சேரி வாசிகளுக்கு போதுமானது. மீதியுள்ள மதுபாட்டிகள் எல்லாம் புதுச்சேரியில் இருந்து கடத்தப்படுகின்றன என்ற அதிர்ச்சி தகவலை கூறினார்.

அப்போது, மதுப்பிரியர்கள் அதிகளவில் இருந்தனர். தற்போது அதையும் விஞ்சும் அளவிற்கு, 'கஞ்சா' குட்கா, மெத்தாம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமையாகியுள்ளனர். இதனால் கள்ளச்சாராயம் காய்ச்சுவது இல்லாமல் போனது. இதனால், ஊறல், கள்ளச்சாராய வழக்குகள் பதிவாவதில்லை. காரணம் மிகக் குறைந்த செலவில், நிறைந்த போதை தரக்கூடிய கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர்.

தற்போதைய கடலுார் மாவட்ட எஸ்.பி., ஜெயகுமாரின் அதிரடி உத்தரவால், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்வது அதிகரித்து வருகிறது.

கடலுாரில் நேற்று கலால் போலீசாரின் தீவிர சோதனையில், நான்கு இளைஞர்கள் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் புவனகிரியில் 5 பேர், கடந்த 19ம் தேதி காட்டுமன்னார்கோவில் அருகே 4 பேர், கடந்த ஜன., 1ம் தேதி அண்ணாமலை நகரில் 6 பேர், கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கஞ்சா வழக்கில் கைது செய்யப்படுபவர்கள், 19 முதல் 25 வயது இளைஞர்கள் தான். மேலும், சிலர் 19 வயதுக்குக் கீழ் உள்ளவர்களும் கஞ்சா பயன்படுத்தத் துவங்கி, சிறார் காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

'மாவட்டம் முழுதும் கஞ்சா மற்றும் போதைப்பொருள் வியாபித்துள்ளது என்பது, இந்த வழக்குகளில் இருந்தே தெரிகிறது. இதற்கு காரணம், மதுவை விட கஞ்சா விலை மலிவு; கஞ்சாவை பயன்படுத்துவதால், தடையின்றி வாகனம் ஓட்டிச் செல்லலாம். 'ஒருமுறை பயன்படுத்திவிட்டால், நீண்ட நேரம் வரை போதை, ஒரே மாதிரியாக இருக்கும். வீட்டிற்குள்ளேயே இதை பயன்படுத்தலாம். இதனால்தான் இளைஞர்கள் இதை நாடிச் செல்கின்றனர்.

'இந்த பழக்கத்திற்கு அடிமையானவர்கள், எதையும் துணிச்சலாக செய்யும் மனநிலைக்கு வந்து விடுகின்றனர். இதன் காரணமாக தான் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுவது சகஜமாகி விடுகிறது. இந்நிலையை உடனடியாக அரசு தடுக்க முயற்சி மேற்கொண்டால்தான், இளைய சமுதாயத்தைக் காப்பாற்ற முடியும்' என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us