sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

வேளாண் கூட்டுறவு சங்கங்களில் கண்துடைப்பு ஆய்வுக்கு 'குட்பை'

/

வேளாண் கூட்டுறவு சங்கங்களில் கண்துடைப்பு ஆய்வுக்கு 'குட்பை'

வேளாண் கூட்டுறவு சங்கங்களில் கண்துடைப்பு ஆய்வுக்கு 'குட்பை'

வேளாண் கூட்டுறவு சங்கங்களில் கண்துடைப்பு ஆய்வுக்கு 'குட்பை'


ADDED : அக் 22, 2025 03:23 AM

Google News

ADDED : அக் 22, 2025 03:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில், ஆய்வு விபரங்களை பதிவேடுகளில் பதிவு செய்கின்றனர். இதில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரை அடுத்து, இதற்கென மொபைல் போன் செயலியை, கூட்டுறவு துறை உருவாக்கியுள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ், 4,473 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன; இவை பயிர் கடன், நகை கடன் போன்ற பிரிவுகளில் கடன் வழங்குவதுடன், உரங்களை விற்கின்றன. ரேஷன் கடை நடத்துவதுடன், வேளாண் உழவு கருவிகளை வாடகைக்கு விடுகின்றன.

சங்கங்களில் பணிபுரியும் சிலர், சங்க நிதியில் முறைகேடு செய்வது, போலி நகைகளுக்கு கடன் வழங்குவது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்.

சார் - பதிவாளர், துணை பதிவாளர், இணை பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள், சங்கங்களில் ஆய்வுக்கு செல்லும்போது , முறைகேடுகளை கண்டுபிடித்தால், அதன் குறிப்பு விபரங்களை பதிவேடுகளில் பதிவு செய்கின்றனர்.

இதில், ஆய்வுக்கு செல்லாமல் ஆய்வு செய்ததுபோல் பதிவு செய்வது, வேண்டுமென்றே தவறாக பதிவு செய்வது, கண்துடைப்பிற்கு ஆய்வு செய்வது போன்ற புகார்கள் எழுகின்றன.

இதை தவிர்க்கும் வகையில், ஆய்வுக்கென தனி மொபைல் போன் செயலியை, கூட்டுறவு துறை உருவாக்கியுள்ளது. இதன் சோதனை முடிவடைந்த நிலையில், விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

இதன் வாயிலாக, ஒரு சங்கத்தில் தவறு நடந்து இருப்பதை அதிகாரி கண்டறிந்து, செயலியில் பதிவு செய்தால், அதை சென்னையில் உள்ள உயரதிகாரிகள் தெரிந்து கொள்ள முடியும். தவறு செய்தவர் மீது விரைவாக விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க முடியும்.






      Dinamalar
      Follow us