sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

 கல்லத்தி மரத்தில் தர்கா கொடியை அகற்றாவிட்டால் பக்தர்கள் திரண்டு அகற்றும் நிலை ஏற்படும்: எச்.ராஜா

/

 கல்லத்தி மரத்தில் தர்கா கொடியை அகற்றாவிட்டால் பக்தர்கள் திரண்டு அகற்றும் நிலை ஏற்படும்: எச்.ராஜா

 கல்லத்தி மரத்தில் தர்கா கொடியை அகற்றாவிட்டால் பக்தர்கள் திரண்டு அகற்றும் நிலை ஏற்படும்: எச்.ராஜா

 கல்லத்தி மரத்தில் தர்கா கொடியை அகற்றாவிட்டால் பக்தர்கள் திரண்டு அகற்றும் நிலை ஏற்படும்: எச்.ராஜா

13


UPDATED : ஜன 13, 2026 05:26 AM

ADDED : ஜன 13, 2026 05:21 AM

Google News

13

UPDATED : ஜன 13, 2026 05:26 AM ADDED : ஜன 13, 2026 05:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கோயிலுக்கு சொந்தமான கல்லத்தி மரத்தில் தர்கா கொடியை அகற்றாவிட்டால், முருக பக்தர்கள் திரண்டு அகற்றும் நிலை ஏற்படும்,'' என பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா எச்சரிக்கை விடுத்தார்.

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த அவர் கூறியதாவது:

பிரதமர் மோடி ஜன., 23ல் தமிழகம் வருகிறார். அன்றைய தினம் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசாரத்தை அவர் முறைப்படி துவக்கி வைக்கிறார்.

தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டி திருப்பரங்குன்றம் முருகப் பெருமானிடமும், காசி விஸ்வநாதரிடமும் ஆசி பெறுவதற்காக வந்திருக்கிறேன்.

நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி, தீபத்துாணில் தீபம் ஏற்றப்பட்டிருக்க வேண்டும். அன்று நான் இங்கு வந்திருந்தேன். அப்போது ஒரு போலீஸ் அதிகாரி யார் என்று ஞாபகம் இல்லை, அவர் 'என்ன... ஒன் மோர் கன்டம்ப்ட்' என சொன்னார். எனவே கோர்ட்டை அவமதித்த கலெக்டர், கமிஷனர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி ஒருவர், பிரதமர் மோடி மதுரைக்கு வரும்போது அவரது வாகனத்தை தாக்குவேன் என்று கூறியிருக்கிறார். அந்த தீய சக்தியை கைது செய்யவில்லை. மாவட்ட நிர்வாகம் ஹிந்துக்களுக்கு எவ்வளவு துாரம் விரோதமாக உள்ளது.

கோயிலுக்கு சொந்தமான கல்லத்தி மரத்தில் உள்ள தர்கா சந்தனக்கூடு கொடியை உடனடியாக அகற்றாவிட்டால், முருக பக்தர்கள் திரண்டு வந்து அதை அகற்றும் நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்.

ஹிந்துக்களின் புனிதமான தீபத்துாண் குறித்து, சட்டமே தெரியாத சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பிணம் எரிக்கும் இடத்தில் தான் பிணத்தை எரிப்பார்கள் என சொல்லியிருக்கிறார்.

தைப்பூசம், கார்த்திகை நட்சத்திரம் வரும். அதற்குள் தீபம் ஏற்ற வேண்டும். அப்படி இல்லையென்றால் இது தேர்தல் பிரச்னையாக மாறி தி.மு.க., கூட்டணியை வீட்டுக்கு அனுப்ப ஹிந்துக்கள் முடிவு செய்வார்கள்.கல்லத்தி மரத்தில் அவர்கள் கொடி கட்டும்போது காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது.

வைகோவிற்கு நடை பயணம் ஒரு பழக்கம். அது இல்லாமல் அவரால் இருக்க முடியாது. முன்பு பஞ்சாப் மாநிலம் போதைப்பொருட்களுக்குப் பெயர் பெற்றிருந்தது, தற்போது தமிழகம் அந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

பள்ளிகள், கடைகளுக்கு அருகே போதைப்பொருள் தாராளமாகக் கிடைக்கிறது. அடுத்த தலைமுறையை காக்க இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு கூறினார்.



எச்.ராஜா கைது: முற்றுகையிட்ட மக்கள்

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமான கல்லத்தி மரத்தில் சந்தனக்கூடு விழா பிறை கொடி கட்டப்பட்டதை பார்க்கச் சென்ற பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா நெல்லி தோப்பு பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டதால் போலீசாரிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இரண்டு மணி நேரம் வாக்குவாதத்திற்கு பின்பு அவர் நெல்லித்தோப்பு பகுதியில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவரை கல்லத்தி மரத்தில் கட்டப்பட்ட சந்தனக்கூடு பிறைகொடியை பார்க்க அனுமதித்தனர்.பின் அவரை போலீஸ் துணை கமிஷனர் இனிகோ திவ்யன், உதவி கமிஷனர் சசி பிரியா கைது செய்து மலையிலிருந்து அழைத்து வந்தனர்.அடிவாரத்தில் அப்பகுதி மக்கள் எச்.ராஜாவை பார்த்து ஏற்றுவோம் தீபம், தீபம் ஏற்றியே தீருவோம் என கோஷம் எழுப்பினர். அவர்களிடம் எச். ராஜா, முருகப்பெருமானை சோதிக் கின்றனர். அவர் திரும்ப சோதிக் காமல் விடமாட்டார்.
சில நாட்களுக்கு முன் திருப்பரங்குன்றம் எல்லையில் முதல்வர் ஸ்டாலின் கார் டயருக்கு ஏற்பட்ட நிலைமை உங்களுக்கு தெரியும் என்றார். அதற்கு அப்பகுதி மக்கள், முருகப்பெருமான் தண்டனை கொடுக்காமல் விடமாட்டார். இது தராசுக்காரர் பூமி. அநியாயம் செய்பவர்களை முருகப்பெருமான் தண்டிப்பார் என கோஷங்கள் எழுப்பினர். நீதிமன்ற உத்தரவுப்படி விரைவில் தீபம் ஏற்றுவோம் என கூறிய எச். ராஜா, பா.ஜ., நிர்வாகிகளை வேனில் ஏறும்படி போலீசார் கூறினர். எதற்காக கைது செய்கிறீர்கள், காரணத்தை கூறுங்கள் என எச்.ராஜா போலீசாருடன் அரை மணி நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது அப்பகுதி மக்கள் ராஜாவை கைது செய்து வேனில் ஏற்றக் கூடாது என கோஷங்கள் எழுப்பி போலீஸ் வேன் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பா.ஜ., மேற்குமாவட்ட தலைவர் சிவலிங்கம், சட்டசபை தொகுதி அமைப்பாளர் ராக்கப்பன், மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினம், கலை கலாசார பிரிவு மாநிலச் செயலாளர் சசிகுமார் ஆகியோரை போலீசார் அருகில் இருந்த சாவடியில் அமர வைத்தனர். அரை மணி நேரத்திற்கு பிறகு அவர்களை போலீசார் விடுவித்தனர்.








      Dinamalar
      Follow us