sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

வாங்கிய ஆர்வம் கொடுப்பதில் இல்லை; திரும்பி வராத விருப்ப மனு; விஜய் அதிர்ச்சி

/

வாங்கிய ஆர்வம் கொடுப்பதில் இல்லை; திரும்பி வராத விருப்ப மனு; விஜய் அதிர்ச்சி

வாங்கிய ஆர்வம் கொடுப்பதில் இல்லை; திரும்பி வராத விருப்ப மனு; விஜய் அதிர்ச்சி

வாங்கிய ஆர்வம் கொடுப்பதில் இல்லை; திரும்பி வராத விருப்ப மனு; விஜய் அதிர்ச்சி

17


UPDATED : பிப் 17, 2026 02:36 PM

ADDED : பிப் 17, 2026 05:58 AM

Google News

17

UPDATED : பிப் 17, 2026 02:36 PM ADDED : பிப் 17, 2026 05:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'த.வெ.க.,வில் போட்டி போட்டு விருப்ப மனுக்களை வாங்கி சென்றவர்களில், பெரும்பாலானோர் மனுவை பூர்த்தி செய்து ஒப்படைக்கவில்லை' என, தகவல் வெளியாகி உள்ளது.

சட்டசபை தேர்தலுக்காக, த.வெ.க., சார்பில், போட்டியிட விரும்புவோருக்கு, சென்னை, பனையூர் அலுவலகத்தில், கடந்த 6ம் தேதி விருப்ப மனு வழங்கப்பட்டது. முதல் நாளே, 10,000 மனுக்கள் விற்று தீர்ந்தன. மனு வாங்க ஏராளமானோர் குவிந்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, 'மனு வாங்க நேரில் வர வேண்டாம். 'ஆன்லைன்' வழியே, மனு வாங்கிக் கொள்ளலாம்' என, கட்சி தலைமை அறிவித்தது. இந்நிலையில், விருப்ப மனு சமர்ப்பிக்க, 20ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, த.வெ.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:


பொதுவாக எல்லா கட்சிகளிலும், தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்களுக்குதான் விருப்ப மனு வழங்கப்படும். மனு கட்டணமாக, 10,000 முதல் 15,000 ரூபாய் வரை நிர்ணயிக்கப்படும். இதனால், குறைந்த நபர்களே மனு வாங்குவர். ஆனால், த.வெ.க.,வில் 100 ரூபாய் கொடுத்து விருப்ப மனு வாங்கலாம் என்றதும், ஏராளமானோர் சென்று மனு வாங்கினர்.

அதை பூர்த்தி செய்து கொடுக்கும்போது, பொதுப் பிரிவினர் 10,000 ரூபாய், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் 5,000 ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நேரில் வந்து 10,000 பேர், 100 ரூபாய் செலுத்தி, விருப்ப மனுக்களை பெற்றனர். 'ஆன்லைன்' வழியே, 40,000 பேர் மனுக்களை பதிவிறக்கம் செய்துள்ளனர். மொத்தமாக 50,000 பேர் விருப்ப மனுக்களை பெற்றுள்ளனர். ஆனால், 5,000க்கும் குறைவான மனுக்கள்தான், பூர்த்தி செய்யப்பட்டு கட்சி தலைமைக்கு திரும்ப வந்துள்ளது. அதிலும், பல மனுக்களில் கட்டு தொகைக்கான வரைவோலை இணைக்கப்படவில்லை.

அதிர்ச்சி


மனு சமர்பிக்கும் பணியே முடியாத நிலையில், பல தொகுதிகளில், கட்சி நிர்வாகிகள் பலரும், 'நான் தான் வேட்பாளர்' எனக் கூறி தொகுதியை வலம் வருகின்றனர். இதற்கு தலைமையில் இருந்து, எந்த மறுப்பும் வரைவில்லை. இதனால், தேவையில்லாமல் விருப்ப மனுவுக்கு, 'நாம் ஏன் செலவு செய்ய வேண்டும்?' என, பலரும் விலகிவிட்டனர்.

இந்த விபரம் விஜயை பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. எனவேதான், மனுவை சமர்ப்பிக்க 20-ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மனுவை சமர்பிக்காமல் இருக்கும் நிர்வாகிகளிடம், அவற்றை பெற்று, உடனே அனுப்பும்படி, மாவட்டச்செயலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us