sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

 அ.தி.மு.க., கூட்டணியில் பசுபதி பாண்டியன் கட்சி

/

 அ.தி.மு.க., கூட்டணியில் பசுபதி பாண்டியன் கட்சி

 அ.தி.மு.க., கூட்டணியில் பசுபதி பாண்டியன் கட்சி

 அ.தி.மு.க., கூட்டணியில் பசுபதி பாண்டியன் கட்சி

1


ADDED : மார் 07, 2026 06:16 AM

Google News

1

ADDED : மார் 07, 2026 06:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அ.தி.மு.க., தலைமை, தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்புடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது.

தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவராக இருந்த பசுபதி பாண்டியன் இறந்த பின், அவரது மகள் சந்தனப்பிரியா, அந்த அமைப்பின் மாநில பொதுச்செயலராக உள்ளார்.

ஆதரவு


கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு அளித்து தென் மாவட்டங்களில் பிரசாரம் செய்தார். அவரது அமைப்புக்கு தென் மாவட்டங்களில் ஆதரவு இருப்பதால், அவரை அழைத்து அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்.

அ.தி.மு.க., கூட்டணியில், அவர் சேர முன்வந்துள்ளதாகவும், ஒரு தொகுதி ஒதுக்க முடிவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. தேவேந்திர குல வேளாளர் சமூக ஓட்டுகள் அதிகமாக இருக்கும் நிலக்கோட்டை அல்லது ஓட்டப்பிடாரம் தொகுதி ஒதுக்க வாய்ப்பு உள்ளதாக அ.தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: 'தி.மு.க., தலைவர் ஸ்டாலினைப் போல, நிறைய கட்சிகளை கூட்டணியில் இணைத்து, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை வலுப்படுத்த வேண்டும்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

அதற்கேற்ப, சின்ன சின்ன கட்சிகளையும் விடாமல் கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் அ.தி.மு.க., களம் இறங்கி உள்ளது.

அதற்காக, தமிழகத்தில் ஓரளவுக்கு செல்வாக்கோடு இருக்கும் அனைத்து கட்சிகளிடமும் கூட்டணி குறித்து பேசுமாறு கட்சியினருக்கு, பொதுச்செயலர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில் தான், தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பை, அ.தி.மு.க., கூட்டணியில் இணைக்க முடிவெடுக்கப் பட்டுள்ளது.

பலன் தருமா?


உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'தே.மு.தி.க., போன்ற ஓரளவுக்கு மக்கள் செல்வாக்குள்ள கட்சிகளை கூட்டணியில் இணைக்க வேண்டும், என்ற நோக்கில் தான், நிறைய கட்சிகளை கூட்டணியில் இணைக்க வேண்டும் என சொல்லி உள்ளார்.

ஆனால், அது கைகூடாததால், சின்ன சின்ன கட்சிகளை கூட்டணியில் சேர்க்க முயற்சிக்கின்றனர். கூட்டணியில் நிறைய எண்ணிக்கையில் கட்சிகள் இருக்கலாம்; ஆனால், அவையெல்லாம் பலன் தருமா என தெரியாது. இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.






      Dinamalar
      Follow us