ADDED : ஏப் 30, 2025 01:40 AM

வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் பல்வேறு குளறுபடிகள் நடக்கின்றன. இது குறித்து, ஒவ்வொரு முறையும், தேர்தல் கமிஷனிடம், அ.தி.மு.க., சார்பில் புகார் தெரிவித்து வருகிறோம்.
வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயரை நீக்க, இறப்பு சான்றிதழ்களை, அவர்களை சார்ந்தோர் அல்லது அரசியல் கட்சிகளை சேர்ந்தோர் கொடுக்க வேண்டும் என்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளே, இறப்பு சான்றிதழ் அடிப்படையில், இறந்தவர்கள் பெயரை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.
இது தொடர்பாக அ.தி.மு.க., தொடர்ந்த வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம், 'இரட்டை பதிவு, போலி வாக்காளர்கள் போன்றோரை நீக்கி, 100 சதவீதம் முழுமையான வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும்' என உத்தரவிட்டது. இதை அமல்படுத்தும்படி, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவிட வேண்டும்.
- வேலுமணி, முன்னாள் அமைச்சர்