sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

பயங்கரவாதிகள் புகலிடம் மேற்கு வங்கம்; அமித் ஷா மம்தா மோதல்

/

பயங்கரவாதிகள் புகலிடம் மேற்கு வங்கம்; அமித் ஷா மம்தா மோதல்

பயங்கரவாதிகள் புகலிடம் மேற்கு வங்கம்; அமித் ஷா மம்தா மோதல்

பயங்கரவாதிகள் புகலிடம் மேற்கு வங்கம்; அமித் ஷா மம்தா மோதல்

3


ADDED : டிச 31, 2025 04:52 AM

Google News

3

ADDED : டிச 31, 2025 04:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொல்கட்டா: மேற்கு வங்கம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டிய நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டில்லி, காஷ்மீரில் பயங்கரவாத சம்பவத்தை நடத்தியது யார் என பதிலடி தந்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கடந்த, 2011 முதல் மம்தா தொடர்ந்து ஆட்சியில் உள்ளார். தமிழகத்துடன் சேர்த்து, மேற்கு வங்கத்துக்கும் வரும், ஏப்., - மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், திரிணமுல் மற்றும் பா.ஜ., இப்போதே பிரசாரத்தை துவக்கிவிட்டன.

இந்நிலையில், மூன்று நாள் பயணமாக மேற்கு வங்கம் வந்துள்ள, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, கொல்கட்டாவில் நேற்று பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது மாநிலத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக அவர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மம்தா பானர்ஜி சரமாரி கேள்விகளை எழுப்பினார்.

எல்லையை திறந்து விட்டார்! கொல்கட்டாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது: திரிணமுல் காங்கிரசின், 14 ஆண்டு ஆட்சி பயம் நிறைந்த, ஊழல் மலிந்த, முறைகேடுகள் மிகுந்ததாக உள்ளது. ஊடுருவல் காரணமாக மக்களிடையே பயம் அதிகரித்துள்ளது. எல்லைகளை திறந்து விட்டதால், மேற்கு வங்கம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ளது. வர உள்ள சட்டசபை தேர்தல் ஊடுருவல் பிரச்னையை மையப்படுத்தியே நடைபெறும். மேற்கு வங்க எல்லைகள் வழியாக நடக்கும் ஊடுருவல் வெறும் மாநில பிரச்னை அல்ல; இது தேசிய பாதுகாப்பு பிரச்னை. நாட்டின் கலாசாரத்தையும் பாதுகாப்பையும் காக்க வேண்டுமானால், மேற்கு வங்க எல்லைகளை மூடி கண்காணிக்க கூடிய அரசு தேவை. திரிணமுல் காங்கிரசால் இது முடியாது; பா.ஜ.,வால் மட்டுமே முடியும். இவ்வாறு அவர் கூறினார்.



நீங்களே காரணம்! இதற்கிடையே கொல்கட்டாவில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது: மேற்கு வங்கம் பயங்கரவாதிகளின் புகலிடம் என்றால், ஜம்மு - -காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல் நடந்தது எப்படி? அந்த தாக்குதலை நீங்கள் நடத்தினீர்களா? சமீபத்தில் டில்லியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு யார் காரணம்? எல்லைப் பகுதிகளில் பெட்ராபோல், சாங்க்ரபந்தாவில் வேலி அமைப்பதற்காக ஏற்கனவே நிலம் வழங்கப்பட்டுள்ளன. தேவையான இடங்களில் நிலம் கொடுத்திருக்கிறோம். ஆனால், எந்தப் பணியும் நடக்கவில்லை. மத்திய அரசின் அனைத்து ரயில்வே திட்டங்களுக்கும் மாநிலம் நிலம் வழங்கியதால் தான் செயல்படுத்தப்பட்டன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி நடப்பது ஒரு முறைகேடு. இவ்வாறு அவர் பேசினார்.








      Dinamalar
      Follow us