sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கன்னியக்கோவிலில் 17ம் ஆண்டு லட்சதீப விழா

/

கன்னியக்கோவிலில் 17ம் ஆண்டு லட்சதீப விழா

கன்னியக்கோவிலில் 17ம் ஆண்டு லட்சதீப விழா

கன்னியக்கோவிலில் 17ம் ஆண்டு லட்சதீப விழா


ADDED : ஏப் 15, 2024 04:35 AM

Google News

ADDED : ஏப் 15, 2024 04:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர் கன்னியக்கோவில் சாந்த ஆஞ்சநேயர் கோவிலில், 17ம் ஆண்டு லட்ச தீப திருவிழா நேற்று நடந்தது.

புதுச்சேரி - கடலுார் சாலை கன்னியக்கோவில் பச்சை வாழியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சாந்த ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று 17ம் ஆண்டு லட்சதீப திருவிழா நடந்தது. அதனையொட்டி, காலை 7.30 மணிக்கு சாந்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.

தொடர்ந்து, காலை 10.30 மணிக்கு சீதா பிராட்டி சமேத ஸ்ரீராமச்சந்திரர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதனை தொடர்ந்து, மாலை, 6.00 மணிக்கு கோவில் வளாகம் முழுவதும் 10008 விளக்குகள் ஏற்றி லட்ச தீபவிழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். இரவு சிறப்பு அலங்காரத்தில் சாந்த ஆஞ்சநேயர் வீதியுலா நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக குழு தலைவர் தனசேகரன், துணை தலைவர் ஜீவகணேஷ், செயலாளர் கலியபெருமாள், பொருளாளர் செந்தில்குமார், உறுப்பினர் கனகராஜ் மற்றும் நிர்வாகிகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us