ADDED : ஜூலை 04, 2026 06:21 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் சைபர் மோசடி கும்பலிடம் 5 பேர் ரூ. 90 ஆயிரம் இழந்துள்ளனர்.
அரியாங்குப்பத்தை சேர்ந்த பெண், பேஸ்புக்கில் மத்திய அரசுடன் தொடர்புடையதாக கூறப்படும் முதலீடு திட்டம் குறித்த விளம்பரத்தை பார்த்து கிளிக் செய்துள்ளார். இதையடுத்து, அவரை தொடர்பு கொண்ட மர்மநபர்கள், முதலீடு தொடர்பான மொபைல் செயலி அனுப்பியுள்ளார். அதை உண்மை என நம்பிய அப்பெண் ரூ. 20 ஆயிரத்து 829 முதலீடு செய்து ஏமாந்தார்.
பெரியகாலாப்பட்டை சேர்ந்தவர், வங்கி கணக்கில் இருந்து அவரது அனுமதியின்றி, மர்மநபர்கள் மோசடியாக ரூ. 40 ஆயிரம் எடுத்து ஏமாற்றியுள்ளனர்.
இதேபோல், டி.என்.பாளையத்தை சேர்ந்தவர் 17 ஆயிரத்து 790, முதலியார்பேட்டையை சேர்ந்தவர் 7 ஆயிரத்து 500, வில்லியனுாரை சேர்ந்தவர் 4 ஆயிரத்து 150 என, மொத்தம் 5 பேர் சைபர் மோசடி கும்பலிடம் ரூ. 90 ஆயிரத்து 269 இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
