/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீஸ் நிலையம் முன் ஆட்டோக்கள் எரிந்து நாசம்
/
போலீஸ் நிலையம் முன் ஆட்டோக்கள் எரிந்து நாசம்
ADDED : ஏப் 06, 2024 05:30 AM

புதுச்சேரி: கிழக்கு போக்குவரத்து போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தியிருந்த 2 ஆட்டோக்கள் தீயில் எரிந்து நாசமானது.
புதுச்சேரி கிழக்கு போக்குவரத்து போலீசார், விபத்து வழக்கில் சிக்கும் வாகனங்களை பறிமுதல் செய்து செஞ்சி சாலை ஆம்பூர் சாலை இடையில் உள்ள பெரிய வாய்க்கால் மேல் பகுதியில் நிறுத்தி வைத்திருந்தனர்.
நேற்று காலை 7:00 மணிக்கு, போக்குவரத்து போலீஸ் நிலையம் முன், நிறுத்தி இருந்த ஆட்டோ ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைத்தனர். இதில், 2 ஆட்டோக்கள் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

