நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார் : கூனிச்சம்பட்டு செங்கேணியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் நேற்று நடந்தது.
இக்கோவிலில், ஆடி மாத சாகை வார்த்தல் உற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது.
இதையொட்டி, அன்று மாலை 4:00 மணிக்கு ஐய்யனாரப்பன் கோவிலில் ஊரணி பொங்கல் நிகழ்ச்சியும், இரவு 8:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.
முக்கிய நிகழ்வாக நேற்று மதியம் 12:00 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் மற்றும் பொது மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.