/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதியவர் சாவு: போலீசார் விசாரணை
/
முதியவர் சாவு: போலீசார் விசாரணை
ADDED : ஆக 17, 2024 02:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி செயின்ட் தாழ் வீதி பிளாட் பாரத்தில் இறந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி செயின்ட் தாழ் வீதி -கேண்டீன் வீதி சந்திப்பு பிளாட்பாரத்தில் 60 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக பெரியகடை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக வழக்குப் பதிந்து இறந்தவர் யார், இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

