கெங்கைமுத்து மாரியம்மன் கோவில் ஆடி உற்சவம் 29ம் தேதி துவக்கம்
கெங்கைமுத்து மாரியம்மன் கோவில் ஆடி உற்சவம் 29ம் தேதி துவக்கம்
ADDED : ஜூலை 26, 2026 07:41 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுசாரம், கெங்கைமுத்து மாரியம்மன் கோவிலில் 47ம் ஆண்டு ஆடி உற்சவம் வரும் 29ம் தேதி துவங்குகிறது.
புதுச்சேரி, புதுசாரத்தில் கெங்கைமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 47ம் ஆண்டு ஆடி உற்சவம் வரும் 29ம் தேதி துவங்குகிறது. இதையொட்டி, அன்று மாலை 6:00 மணிக்கு கணபதி பூஜை, இரவு 7:00 மணிக்கு காப்புக் கட்டுதல் நடக்கிறது. 30ம் தேதி மாலை 5:00 மணிக்கு ஊரணிப் பொங்கல் வழிபாடு நடக்கிறது.
வரும் 31ம் தேதி காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம், காலை 8:00 மணிக்கு கரகம் வீதியுலா புறப்பாடு, மதியம் 1:00 மணிக்கு சாகை வார்த்தல், இரவு 7:00 மணிக்கு அம்மன் புகழ் பாடுதல், கும்பம் படையல் நடக்கிறது. வரும் 2ம் தேதி காலை 8:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு நடக்கிறது.
