தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெட்டி கடையில் ‘குட்கா’ பறிமுதல்

பெட்டி கடையில் ‘குட்கா’ பறிமுதல்

பெட்டி கடையில் ‘குட்கா’ பறிமுதல்


ADDED : ஜூன் 23, 2026 06:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 23, 2026 06:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: செல்லிப்பட்டில் விற்பனைக்காக வைத்திருந்த குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். செல்லிப்பட்டு முருகன் கோவில் அருகேயுள்ள பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது.

போலீசார் அங்கு விரைந்து சென்று கடையை சோதனை செய்தனர். அதில், குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ரூ. 1050 மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

குட்கா பொருட்களை விற்பனை செய்ததாக, கடையின் உரிமையாளர் செல்லிப்பட்டு, செல்வ முருகன் நகரை சேர்ந்த உமாபதி, 52; மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us