ADDED : மார் 24, 2024 04:24 AM

புதுச்சேரி: வில்லியனுார் ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்டம் சார்பில், ஊட்டச்சத்து இருவார விழாவை முன்னிட்டு ஆரோக்கிய குழந்தைப் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
திருக்கனுார் அங்கன்வாடி மையத்தில் நடந்த விழாவிற்கு, அங்கன்வாடி பணியாளர் லதா வரவேற்றார். மருத்துவ அதிகாரி சக்திதரன் தலைமை தாங்கினார். டாக்டர் சுஷ்மிதா, கிராம சுகாதார செவிலியர் ஹேமலதா முன்னிலை வகித்தனர்.
விழாவில், குழந்தைகளின் வயதிற்கு ஏற்ற எடை, காலத்தோடு தடுப்பூசி போடுதல் மற்றும் தாய்ப்பால் மட்டும் அருந்திய குழந்தைகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆரோக்கிய குழந்தைகள் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை ஆஷா பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் செய்திருந்தனர். இதில், தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கிராமப்புற சுகாதார செவிலியர் பனிமலர் நன்றி கூறினார்.

