ADDED : ஜூலை 29, 2026 05:42 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி, சப்தகிரி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுகக்கான இலவச கணினி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.
பயிற்சி வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா லாஸ்பேட்டையில் நேற்று நடந்தது. அமைச்சர் சிவக்கொழுந்து பங்கேற்று கணினி பயிற்சி வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
இதில், சப்தகிரி அறக்கட்டளையின் பொறுப்பாளர் ரமேஷ்குமார், பயற்சி பெற்ற மாணவர்கள், பெற்றோர்கள், என்.ஆர்.காங்., நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
