sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அதிவேக பைக்குகள் பறிமுதல் காரைக்கால் போலீசார் அதிரடி

/

அதிவேக பைக்குகள் பறிமுதல் காரைக்கால் போலீசார் அதிரடி

அதிவேக பைக்குகள் பறிமுதல் காரைக்கால் போலீசார் அதிரடி

அதிவேக பைக்குகள் பறிமுதல் காரைக்கால் போலீசார் அதிரடி


ADDED : ஆக 11, 2024 05:26 AM

Google News

ADDED : ஆக 11, 2024 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால் : காரைக்காலில் அதிவேகமாக சென்ற 20 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

காரைக்கால் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் ஏராளமான படித்து வருகின்றனர். பெற்றோர்கள் சிலர் ஆபத்தை உணராமல் தங்கள் பிள்ளைகளுக்கு விலை உயர்ந்த பைக்குகளை வாங்கி தருகின்றனர்.

மாணவர்கள் பலர் நண்பர்கள் முன்னிலையில் தங்கள் கெத்தை காட்டுவதற்கு பைக்குகளில் பள்ளிகளுக்கு வருகின்றனர். சாலையில் நடந்து செல்வோர், வாகனங்களில் வருவோரை கவனத்தில் கொள்ளாமல் , மாணவர்கள் அதிவேகத்தில் பைக்குகளை ஓட்டிச் செல்கின்றனர். நகர் பகுதியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பைக்குகளில் வேகமாக வலம் வருவதால் விபத்துக்கள் நடக்கின்றன. பலர் உயிரிழப்பதுடன், காயமும் அடைகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் போக்குவரத்து போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில், நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி தலைமையிலான போலீசார் நிரவி, கடற்கரை சாலை. திருநள்ளார் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் பைக்கில் அதிவேகமாக வந்த இளைஞர்களை மடக்கி, பைக்கை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை பொது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.






      Dinamalar
      Follow us