UPDATED : ஜூலை 30, 2026 07:54 PM
ADDED : ஜூலை 30, 2026 07:22 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: மகளை காணவில்லை என, தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.
நைனார்மண்டபம், குயவர் வீதியை சேர்ந்தவர் கிரிஜா மகள் ரேவதி,25. இவரது தந்தை குடும்பத்தை விட்டு பிரிந்து அவரது சொந்த ஊரான விழுப்புரம் அடுத்த ராம்பாக்கத்தில் தனியாக வசித்து வருகிறார். அவரை பார்க்க ரேவதி கடந்த 22ம் தேதி தாயிடம் கூறி விட்டு சென்றவர் இரு நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை.
மொபைலும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அவரது தாய் கிரிஜா அளித்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
