sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

குஜராத்தில் இருந்து தான் போதை பொருட்கள் புதுச்சேரிக்கு வருகிறது காங்.,வேட்பாளர் வைத்திலிங்கம் தகவல்

/

குஜராத்தில் இருந்து தான் போதை பொருட்கள் புதுச்சேரிக்கு வருகிறது காங்.,வேட்பாளர் வைத்திலிங்கம் தகவல்

குஜராத்தில் இருந்து தான் போதை பொருட்கள் புதுச்சேரிக்கு வருகிறது காங்.,வேட்பாளர் வைத்திலிங்கம் தகவல்

குஜராத்தில் இருந்து தான் போதை பொருட்கள் புதுச்சேரிக்கு வருகிறது காங்.,வேட்பாளர் வைத்திலிங்கம் தகவல்


ADDED : ஏப் 09, 2024 04:50 AM

Google News

ADDED : ஏப் 09, 2024 04:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: குஜராத் துறைமுகத்தில் இருந்துதான் போதை பொருட்கள் புதுச்சேரிக்கு கொண்டுவரப்படுகிறது என காங்.,வேட்பாளர் குற்றம்சாட்டிள்ளார்.

லோக்சபா தேர்தலையொட்டி, அரியாங்குப்பம் பகுதியில் இண்டியா கூட்டணி சார்பில், காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் நேற்று ஒட்டு சேகரிப்பின் போது பேசியதாவது:

பா.ஜ., ஆட்சி புதுச்சேரியிலும், மத்தியிலும் எப்படி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், பா.ஜ., ஆட்சியில் வேலை வாய்ப்பு குறைந்துள்ளது. இந்தியாவில், 3 கோடி வேலை வாய்ப்புகள் நிரப்பாமல் உள்ளது. புதுச்சேரியில், 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பாமல் இருந்து வருகிறது.

ஆசிரியர்கள், பொறியாளர்கள், பொதுப்பணித்துறை ஊழியர்கள், மின்துறை ஊழியர்கள் சமூகநலத்துறையில் காலிப்பணியிடங்கள் அதிகமாக உள்ளது. மாகி, ஏனாமில் போக்குவரத்துத்துறை அலுவலகம் இல்லாமல் இருக்கிறது.மருத்துவமனைகளில், டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ கல்லுாரியில் பேராசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. வேலைகள் இருந்தும் வேலையை தருவதில்லை. காரைக்கால், துறைமுகத்திற்கு அதானி வந்து செல்வதற்காக தேசிய நெடுஞ்சாலை ரூ. 4 ஆயிரம் கோடிக்கு அமைக்கப்பட்டு வருகிறது.

குஜராத் துறைமுகத்தில், தினமும் போதை பொருள் பிடிப்பட்டு வருகிறது. அங்கிருந்து தான், புதுச்சேரிக்கு போதை பொருட்கள் வருகிறது. முத்தியால்பேட்டை சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு போதை பொருட்களை கொடுத்தவர்கள் யார் என தெரிவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us