ADDED : ஆக 09, 2026 05:21 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி அங்காள பரமேஸ்வரி கோவிலில் 45ம் ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை நடைபெற்றது.
புதுச்சேரி, சின்ன சுப்புராயப்பிள்ளை வீதியில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று 45ம் ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை நடந்தது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அம்மனுக்கு ஏகதின லட்சார்ச்சனை நடக்கிறது.
காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், 9 மணி முதல் 11 மணி வரையிலும், 11 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும், 5 மணி முதல் இரவு 7 மணி வரை ஆகிய ஐந்து வேளையும் நடந்த லட்சார்ச்சனையில் பக்தர்கள் பலர் திரளாக கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அதிகாரி ஜனார்த்தனன் தலைமையிலான நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்தனர்.
