sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வாகனங்களின் பேன்சி எண்கள் 22ம் தேதி ஏலம்

/

வாகனங்களின் பேன்சி எண்கள் 22ம் தேதி ஏலம்

வாகனங்களின் பேன்சி எண்கள் 22ம் தேதி ஏலம்

வாகனங்களின் பேன்சி எண்கள் 22ம் தேதி ஏலம்


ADDED : ஆக 18, 2024 11:22 PM

Google News

ADDED : ஆக 18, 2024 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: போக்குவரத்து துறையில் வாகனங்களுக்கான பேன்சி எண்கள் ஏலம் வரும் 22ம் தேதி நடக்கிறது.

போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரி போக்குவரத்து துறையின் PY- 01 DD (புதுச்சேரி) வரிசையில் உள்ள எண்கள் http://parivahan.gov.in/fancy என்ற இணைய தளத்தில் வரும் 22ம் தேதி காலை 11:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை ஏலம் விட இருக்கிறது.

இந்த ஏலத்தில் பங்கு பெறுவதற்கு தேவையான பெயர் (யூசர் நேம்) மற்றும் கடவு சொல் (பாஸ்வேர்டு) http://parivahan.gov.in/fancy என்ற இணையதளத்தில் 'New Public User' கிளிக் செய்வதன் மூலம் இன்று 19ம் தேதி மதல் வரும் 21ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு பதிவு செய்தவர்கள் மட்டும் 22ம் தேதி காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை ஏலத்தில் பங்கு பெறலாம். இந்த இ- ஆக் ஷன் முறையில் பங்கு பெற விரும்பும் பொதுமக்கள் அதற்கான வழிமுறைகள் மற்றும் ஏல நிபந்தனைகளை இன்று 19 ம் தேதி முதல் http://transport.py.gov.in என்ற இணைய தள முகவரியில் பார்த்து பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத் தொகையின் விபரம், இ.எம்.டி., விபரம், ஏல நிபந்தனைகள் குறித்த விபரங்கள் மற்றும் இது சம்பந்தமான இதர விபரங்களை போக்குவரத்து துறை அலுவலகத்தின் தொலைபேசி எண் 0413-2280170 மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட எண் முன்பதிவு செய்யப்பட்ட வாகனம் அந்த எண்ணை முன்பதிவு செய்த நாளில் இருந்து 90 நாட்களுக்குள் பதிவு செய்ய தவறினால் அத்தகைய முன்பதிவு செயலிழந்து விடும்.

அவருக்கு ஒதுக்கப்பட்ட எண் அவரது உரிமையை இழந்து விடும். இந்த ஏலத்தில் கலந்து கொண்டு ஏலம் சம்பந்தப்பட்ட பண பரிவர்த்தனை அனைத்தும் ஆன்லைன் பேமண்ட் மூலம் இணையதளம் வாயிலாக மட்டும் பெறப்படும். நேரிலோ மற்றும் காசோலையாகவோ ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us