/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிளஸ் 1 தேர்வு: 7036 பேர் பங்கேற்பு
/
பிளஸ் 1 தேர்வு: 7036 பேர் பங்கேற்பு
ADDED : மார் 06, 2025 04:00 AM
புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் மையத்தில் நடந்த, பிளஸ் 1 தேர்வில், 7 ஆயிரத்து 36 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.
அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ, பள்ளிகளாக மாற்றப்பட்டு, கடந்த 15ம் தேதி முதல், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கு தேர்வு துவங்கியது. தமிழக பாடத்திட்டத்தின் கீழ், புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த 3ம் தேதி, துவங்கியது. இந்நிலையில், பிளஸ் 1 தேர்வு நேற்று துவங்கியது. அதில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், உள்ள 102 தனியார் பள்ளிகளில் இருந்து, மொத்தம் 6 ஆயிரத்து 988 மாணவர்கள் பிளஸ் 1 தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். அதில், 6 ஆயிரத்து 942 மாணவர்கள் தேர்வு எழுதினர். 46 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.
புதுச்சேரி, காரைக்காலில் இருந்து பிளஸ் 1 தனித்தேர்வை எழுத 115 பேர் அனுமதிக்கப்பட்டனர். அதில், 94 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில், 21 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. பிளஸ் 1 தேர்வில் தனித்தேர்கள் உட்பட மொத்தம் 7036 மாணவர்கள் தேர்வு எழுதினர்.