/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரியாங்குப்பத்தில் போலீசார் சோதனை
/
அரியாங்குப்பத்தில் போலீசார் சோதனை
ADDED : ஏப் 30, 2024 05:31 AM

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் மோப்ப நாயுடன் ரவுடிகளின் வீடுகளின் அதிரடி சோதனை நடத்தினர்.
புதுச்சேரியில் கஞ்சா விற்னையை தடுக்கும் வகையில் போலீசார் ரவுடிகளின் வீடுகள், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
நகரப்பகுதியில் கஞ்சாவை கட்டுப்படுத்த, தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அரியாங்குப்பம் போலீசார் கஞ்சா விற்பனையை தடுக்க நேற்று இரவு அரியாங்குப்பம், சுப்பையா நகர், பி.சி.பி., நகர், சண்முகா நகர், வீராம்பட்டினம் சாலை, உள்ளிட்ட பகுதியில் உள்ள ரவுடிகளின் வீடுகளின் சோதனை நடத்தினர்.
போலீசார் நடத்திய சோதனையால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

