sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தீவனம் சாப்பிட்ட கன்று குட்டி உயிரிழப்பு  போலீசார் வழக்கு பதிவு

/

தீவனம் சாப்பிட்ட கன்று குட்டி உயிரிழப்பு  போலீசார் வழக்கு பதிவு

தீவனம் சாப்பிட்ட கன்று குட்டி உயிரிழப்பு  போலீசார் வழக்கு பதிவு

தீவனம் சாப்பிட்ட கன்று குட்டி உயிரிழப்பு  போலீசார் வழக்கு பதிவு


ADDED : ஜூன் 03, 2024 05:21 AM

Google News

ADDED : ஜூன் 03, 2024 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : கேதுமை தவிடு, மாட்டு தீவனம் சாப்பிட்ட கன்று குட்டி வயிறு வீங்கி இறந்தது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி பீச்சைவீரன் பேட், ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழக குடியிருப்பைச் சேர்ந்தவர் பரசுராமன், 54; ஆட்டோ டிரைவர். இவரது வீட்டில் 3 பசுமாடுகள், 2 கன்று குட்டிகள் வளர்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் வில்லியனுார் ஒதியம்பட்டு ரோடு, கனுவாபேட் அருகில் உள்ள கடையில் கோதுமை தவிடு மற்றும் கலப்பு தீவனம் வாங்கி வந்து, மாடுகள் மற்றும் கன்று குட்டிகளுக்கு கொடுத்தார்.

அதை சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் ஒரு வயது உடைய கன்று குட்டி நுரை தள்ளி வயிறு வீங்கி இறந்தது.

மாட்டு தீவனத்தில் விஷத்தன்மை கொண்ட பொருள் கலந்திருந்ததால் தனது கன்று குட்டி இறந்ததாக பரசுராமன் ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து, இறந்த கன்று குட்டியை பிரேத பரிசோதனை செய்து ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us