ADDED : ஆக 03, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: சேக்கிழார் அரசு உயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு சீருடை மற்றும் லோகோ வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் பழனி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பள்ளி கல்வித்துறை துணை இயக்குனர் ராமச்சந்திரன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் நாகராஜன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சீருடை வழங்கி சிறப்புரையாற்றினர்.விழாவில் ஆசிரியர்கள் அறிவழகன், விஜய்,வித்தியானந்தன், கஸ்தூரி, ஷீலா, ரேணுகா, சவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சமூக அறிவியல் ஆசிரியர் முருகன் நன்றி கூறினார்.
