ADDED : ஜூலை 20, 2026 06:04 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: உழவர்கரை அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கான சீருடை மற்றும் நாட்குறிப்பேடு வழங்கும் விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் சசிகலா வரவேற்றார். விழாவில், நாராயணசாமி எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை, நாட்குறிப்பேடு (டைரி) மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கினார்.
இதில், பள்ளி ஆசிரியர்கள் சுனிதாடெனியா, கார்த்திக், ஆர்த்தி, உமாமகேஷ்வரி உள்ளிட்ட என்.ஆர்.காங்., பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
