sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

9 பேரிடம் ரூ.1.96 லட்சம் 'அபேஸ்'

/

9 பேரிடம் ரூ.1.96 லட்சம் 'அபேஸ்'

9 பேரிடம் ரூ.1.96 லட்சம் 'அபேஸ்'

9 பேரிடம் ரூ.1.96 லட்சம் 'அபேஸ்'


ADDED : மார் 15, 2025 06:27 AM

Google News

ADDED : மார் 15, 2025 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி, ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாலதிரிபுரசுந்தரி. இவரது நண்பரின் வாட்ஸ்ஆப் ஹேக் செய்த மர்ம கும்பல், நண்பர் பெயரில் மருத்துவ அவசர தேவை என, தகவல் வந்தது. இதனை நம்பிய பாலதிரிபுரசுந்தரி, மர்ம நபர் கூறிய வங்கி கணக்கிற்கு, 80 ஆயிரம் ரூபாய் அனுப்பினார். சில மணி நேரம் கழித்து உறவினரை தொடர்பு கொண்டபோது, அவரது வாட்ஸ் ஆப் எண் ஹேக் செய்யப்பட்டது தெரியவந்தது. அதன்பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.

புதுச்சேரி எல்லையம்மன் கோவில் வீதியை சேர்ந்த அமீர், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து, ரூ. 30,000 இழந்தார். காரைக்காலை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் ரூ. 28,150, கீழ்சாத்தமங்கலத்தை சேர்ந்த சுரேந்தர் ரூ. 6,000, நல்லவாடு ஆனந்தி ரூ. 2,000, ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார், ரூ. 6,195, சண்முகாபுரத்தை சேர்ந்த மல்லிகா ரூ. 20, 000, கிரண்பாலா ரூ. 19,000 என மொத்தம் 9 பேர் 1 லட்சத்து 96 ஆயிரத்து 445 ரூபாயை மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர். சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us