sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கடலில் மூழ்கி மாணவர் பலி: கிருமாம்பாக்கம் அருகே சோகம்

/

கடலில் மூழ்கி மாணவர் பலி: கிருமாம்பாக்கம் அருகே சோகம்

கடலில் மூழ்கி மாணவர் பலி: கிருமாம்பாக்கம் அருகே சோகம்

கடலில் மூழ்கி மாணவர் பலி: கிருமாம்பாக்கம் அருகே சோகம்


ADDED : மார் 15, 2025 06:29 AM

Google News

ADDED : மார் 15, 2025 06:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: கிருமாம்பாக்கம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் தமிழரசன் மகன் சபரீஸ்வரன், 13; அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்தார்.

மாசி மகத்தை முன்னிட்டு நேற்று சபரீஸ்வரன் தனது நண்பர்களுடன் சைக்கிளில் பனித்திட்டு கடற்கரைக்கு சென்று, முகத்துவாரத்தில் குளித்தார். அலையில் சிக்கிய சபரீஸ்வரன் நீரில் மூழ்கி மாயமானார். அவரது நண்பர்கள் கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் இருந்த மீனவர்கள், பொதுமக்கள் ஓடிவந்து, பைபர் படகு மூலம் தேடினர்.

தகவலறிந்த கிருமாம்பாக்கம் போலீசார், பாகூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர். மூன்று மணி நேரத்திற்கு பிறகு சபரீஸ்வரன் சடலமாக மீட்கப்பட்டார். கிருமாம்பாக்கம் போலீசார் சபரீஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us