/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு
/
மாணவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு
ADDED : ஜூன் 13, 2024 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பண்டசோழநல்லுார் வள்ளலார் அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுச்சேரியில் அரசு, தனியார் மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின் நேற்று திறக்கப்பட்டது.
பண்டசோழநல்லுார் வள்ளலார் அரசு நடுநிலைப்பள்ளியில் தோரணங்கள், பலுான்கள் கட்டியிருந்தனர். நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்களை பள்ளி சார்பில் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.