ADDED : ஜூலை 01, 2024 06:29 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி : சேதாரப்பட்டு, முத்தமிழ் நகர், 2வது தெருவைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சசிகலா, 35; தொண்டமானந்தம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியை.
கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி காலை வழக்கம் போல் பள்ளிக்கு புறப்பட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து குமார் கொடுத்த புகாரின் பேரில் சேதராப்பட்டு போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
