ADDED : ஏப் 11, 2024 03:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: பொது இடத்தில் ஆபாசமாக பேசியவரை போலீசார் கைது செய்தனர்.
தவளக்குப்பம் தானாம்பாளையம் பகுதியில் ஒருவர் பொது இடத்தில் நின்று கொண்டு, பொதுமக்களை ஆபாசமாக பேசுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதையடுத்து, போலீசார் அந்த இடத்தில் நின்றவரை பிடித்து விசாரித்தனர்.
அவர், ராஜிவ்காந்தி நகரை சேர்ந்த ராஜ், 47; என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

