sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாய்க்காலில் விழுந்த தொழிலாளி மாயம்

வாய்க்காலில் விழுந்த தொழிலாளி மாயம்

வாய்க்காலில் விழுந்த தொழிலாளி மாயம்


ADDED : ஆக 10, 2024 04:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2024 04:43 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று இரவு பெய்த கனமழையின் போது, வாய்க்காலில் தவறி விழுந்து தொழிலாளி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரியில் நேற்று இரவு 9:00 மணி முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால், நகரின் முக்கிய சாலைகளில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.

புதுச்சேரி ஜீவானந்தபுரம் பகுதியை சேர்ந்த அய்யப்பன் 40; என்பவர் இரவு 10:00 மணியளவில், வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். அருகில் இருந்த கழிவு நீர் வாயக்காலில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து மாயமானார்.

தகவலறிந்த கோரிமேடு தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாய்க்காலில் விழுந்து மாயமான அய்யப்பனை தேடும் பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவு 12:00 மணியை கடந்தும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இருப்பினும், அய்யப்பன் குறித்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில், தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாய்க்காலில் விழுந்து மாயமான சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us