/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சித்தானந்த சுவாமி கோவிலில் இன்று குரு பெயர்ச்சி விழா
/
சித்தானந்த சுவாமி கோவிலில் இன்று குரு பெயர்ச்சி விழா
சித்தானந்த சுவாமி கோவிலில் இன்று குரு பெயர்ச்சி விழா
சித்தானந்த சுவாமி கோவிலில் இன்று குரு பெயர்ச்சி விழா
ADDED : மே 01, 2024 01:12 AM
புதுச்சேரி, : கருவடிக்குப்பத்தில் உள்ள, சித்தானந்த சுவாமி கோவிலில் குரு பெயர்ச்சி விழா இன்று நடக்கிறது.
குரு பகவான் மேஷ ராசியில் இருந்து, ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாவதை முன்னிட்டு, சித்தானந்தா சுவாமி கோவிலில் இன்று காலை கலச பிரதிஷ்டை செய்யப்பட்டு, மாலை 3:00 மணியளவில் கணபதி ேஹாமத்துடன் பூஜைகள் துவங்குகிறது.
தொடர்ந்து, மாலை 4:00 மணிக்கு குரு பகவானுக்கு மகா அபிேஷகம், 5:19 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.
மகா அபிேஷகத்திற்கு தேவையான பால், தயிர், நெய், பழ வகைகள், விபூதி, சந்தனம் போன்ற பொருட்கள் அளிக்க விரும்புபவர்கள் இன்று மாலை 3:00 மணிக்குள் கோவில் அலுவலகத்தில் தரலாம்.
விழா ஏற்பாடுகளை, அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள், கோவில் குருக்கள் தேவசேனாதிபதி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.