ADDED : மே 06, 2026 07:41 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி மாணவர்களிடம் மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து வி.சி., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முதன்மை செயலாளர் அரிமா தமிழன் தலைமை தாங்கினார். கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி., கண்டன உரையாற்றினார். இதில், திரளான நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், புதுச்சேரியில் இருமொழி கொள்கையை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். மாணவர்களிடம் கட்டாய இந்தி திணிப்பை கைவிட வேண்டும் என, வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
