ADDED : ஆக 02, 2026 06:53 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: வீட்டில் இருந்து குழந்தையுடன் சென்ற மனைவியை காணவில்லை என, கணவர் போலீசில் புகார் செய்தார்.
புதுச்சேரி, மூலக்குலம் ஜெ.ஜெ., நகரை சேர்ந்தவர் ஞானபிரகாசம் இவரது மனைவி விஜயலட்சுமி, 30; இவர், கடந்த 29ம் தேதி வீட்டில் இருந்து, இரண்டரை வயது பெண் குழந்தையுடன் வெளியில் சென்றார். இரவு வரை வீடு திரும்பாததால், உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
