ADDED : மே 03, 2026 09:11 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பொதுமக்களுக்கு இடையூறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனுார் போலீசார் நேற்று முன்தினம் மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரியூர் ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த முகேஷ், 34, என்பவர், மது போதையில், எம்.ஜி.ஆர்., சிலை அருகில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு இடையூறாக ரகளையில் ஈடுபட்டார்.
அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
