ADDED : டிச 26, 2025 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: திருக்கனுார் வக்ரகாளியம்மன் வழிபாடு தலைமை நற்பணி மன்றம் சார்பில், 1,008 பால்குட ஊர்வலம் நேற்று நடந்தது.
திருக்கனுார் முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து உலக நன்மை, ஊர் செழிப்பாக இருக்க வேண்டி, 1008 பால்குடம் ஊர்வலம் மற்றும் அபிஷேகம் நேற்று நடந்தது.
திருக்கனுார் முத்து மாரியம்மன் கோவிலில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், பால்குடங்களுடன் ஊர்வலமாக திருவக்கரைக்கு சென்று வக்கிரகாளியம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
பக்தர்கள், பொதுமக்களுக்கு திருவக்கரையில் அன்னதானம் வழங்கப்பட்டது.

